அகழியில் அழுகிய உடல் - கிடைத்தது ஒரே ஒரு அடையாளம் - வேலூரில் பரபரப்பு

x

வேலூர் கோட்டை அகழியில் 30 வயதுடைய இளைஞர் கொலை செய்யப்பட்டு தார்ப்பாயால் மூடப்பட்ட நிலையில் மிதந்தார். உடலை மீட்டு போலீசார் சோதனை செய்ததில் அவருடைய உடலில் எஸ்.ஏ.சித்ரா என பச்சை குத்தப்பட்டு இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு ஆகியோர் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டவரின் அடையாளங்களை வைத்து அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்