வாழைப்பழ வியாபாரியின் குழந்தைகள் தேசிய அளவில் தங்கம் வென்று சாதனை

x

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற வாழைப்பழ வியாபாரியின் குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டினார். ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், தமிழ்நாடு சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 16 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மலம்பட்டியை சேர்ந்த வாழைப்பழ வியாபாரியின் குழந்தைகளான காஞ்சி ரித்திக், காஞ்சி லக்ஷிதா உள்ளிட்டோர் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினர். பதக்கம் வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேரில் அழைத்து பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்