பைக்கில் வந்த பெண்ணை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் டார்ச்சர் செய்த நபர்.திருச்சியில் அதிர்ச்சி

x

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வது போல் அத்துமீற முயன்ற புகாரில், கிராம தலைவர் கைது செய்யப்பட்டார். இருதரப்பினருக்கும் இடையேயான இடப் பிரச்சினையில், பாதிக்கப்பட்ட பெண்ணை, வள்ளுவர் நகரைச் சேர்ந்த கிராம தலைவர் ரமேஷ் காவல்நிலையம் அழைத்துச் சென்று புகார் அளித்தார். பின்னர், அந்தப் பெண்ணுடன் ரமேஷ் வீடு திரும்பியபோது, வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் ரமேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்