ஆசை காட்டி பல லட்சம் மோசடி.. மொத்தமாக சுருட்டிக்கொண்டு ஓடிய நபர்

x

சிவகங்கை மாவட்டம் வைரவபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர், காரைக்குடியில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வரும் ஆறுமுகம் என்பவரிடம், பங்கு சந்தையில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ஆறுமுகம், 34 லட்சம் ரூபாய் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்த நிலையில், தனது நண்பர்களையும் சுமார் 42 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்தார். தொடர்ந்து எந்தவொரு பணத்தையும் திருப்பி தராமல் ராஜேஷ் கண்ணன் இழுத்தடித்து வந்ததால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் போலீசில் புகாரளித்தார். விசாரணயில், பங்கு சந்தையில் முதலீடு என்ற போர்வையில் ராஜேஷ் கண்ணன் பலரிடம் பணம் மோசடி செய்தது தெரியவர, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்