ஊருக்கு நடுவே பெண் உடலை நிர்வாணமாக குழி தோண்டி புதைத்த நபர்.. பேரதிர்ச்சி சம்பவம்

x

புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில், ஆராயி என்ற பெண் யாசகம் எடுத்து பிழைப்பை நடத்தி வந்தார். அதே பகுதியில் பேப்பர்களை சேகரித்து வருமானத்தை ஈட்டி வந்த ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு, 2 பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில், ஆராயும், வெங்கடேஷூம் பழகி வந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுபோதையில் இருந்த ஆராய் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், யாருக்கும் தெரியாமல், அதே இடத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் ஆராயின் உடலை வைத்து, மண்ணை போட்டு மூடிக்கொண்டு இருந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வெங்கடேஷை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்