ரூ.1.10 கோடியை சுருட்டிவிட்டு 10 வருடமாக டிமிக்கி கொடுத்த நபர்

x

ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகக் கூறி, 5 பேரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாருதி நகரை சேர்ந்த பாலாஜிபாபு என்பவர், நீடூரை சேர்ந்த இக்பால், சாதிக், முகமதுபாரூக், அப்ஸர் ரஹ்மான், சபிருதீன் ஆகியோரை, பங்குதாரராக சேர்த்து கடந்த 2013-ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கினார். இதற்காக அந்த 5 பேரிடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய பாலாஜிபாபு, அதற்கான வட்டியை மாதந்தோறும் தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், 10 ஆண்டுகள் கடந்த நிலையில், முதலீடு செய்த பணமும், அதற்கான வட்டித் தொகையும் தராத நிலையில், பாலாஜிபாபு கொலை மிரட்டல் விடுத்ததா கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்