பொள்ளாச்சி அருகே வியாபாரியை கடித்து வைத்த ஊராட்சி தலைவி கணவர் கம்பி எண்ணும் சோகம்

x

பொள்ளாச்சி அருகே வைக்கோல் வியாபாரியை கடித்து காயப்படுத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார். அம்பராம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா, வைக்கோல் பாரம் ஏற்றிய வாகனத்தை காலி இடத்தில் நிறுத்திவிட்டு சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து கேட்டு, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பைஜில், இளையராஜாவிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பைஜில், இளையராஜாவை கடித்ததில் அவர் காயமடைந்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இளையராஜா சிகிச்சை பெற்று வரும் நிலையில், புகாரின் பேரில் போலீசார் பைஜிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்