வெளிநாட்டில் உயிரிழந்த கணவர் - "ஒரே ஒரு தடவை அவர் முகத்தை பாத்துக்குறேன்"-சொந்த ஊரில் போராடும் மனைவி

x

குவைத் நாட்டில் உயிரிழந்த எலக்ட்ரீசியனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அருகே, மாத்தூரை சேர்ந்தவர் முருகேசன். குவைத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இவர், உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், வறுமையில் தவிக்கும் குடும்பத்தை கருத்தில் கொண்டு, அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர அரசு உதவ வேண்டுமென, குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்