பிரபல ரியல் எஸ்டேட் அதிபரை கத்தி முனையில் கடத்திய கும்பல்

x

பிரபல ரியல் எஸ்டேட் அதிபரை கத்தி முனையில் கடத்திய கும்பல்

திருப்போரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி 69 லட்சம் பணம் பறித்து சென்ற வழக்கில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்தவர் 42 வயதான மோகன்ராஜ்.

ரியல் எஸ்டேட் அதிபரான இவரை கடத்திய மர்ம நபர்கள், கத்தி முனையில் மிரட்டி, 69 லட்ச ரூபாயை பறித்துக்கொண்டு விடுவித்தனர்.

இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 60 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்