வறுமையின் பிடியில் குடும்பம் - கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளி - வேதனையில் கதறும் பெற்றோர்

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குமார் - வசந்தி தம்பதி. பீடி சுற்றும் தொழிலாளிகளான இவர்களுக்கு, மாதேஸ்வரன் என்ற மகன் இருக்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு முடித்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் மாணவரிடம் கட்டணம் கேட்டு வற்புறுத்திய நிர்வாகம், மாற்றுச் சான்றிதழ் தரவும் மறுத்துள்ளது. இதனால், தொடர்ந்து படிக்க முடியாத சூழலில், மாணவன் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்