குடிபோதையில் ATM இயந்திரத்தை பார்த்தவுடன் செய்ய கூடாததை செய்த நபர்

x

போதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற நபர், அலாரம் அடித்ததால் வசமாக சிக்கினார்...

சென்னை, வியாசர்பாடி, நியூ மெகிசின்புரத்தில் அமைந்துள்ள ஏடிஎம் வங்கியில் இன்று காலை 5 மணியளவில் அலாரம் ஒலித்துள்ளது... அங்கிருந்த பொது மக்கள் காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்... அங்கு குடி போதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடக்க முயன்ற நபரை அவர்கள் மடக்கிப் பிடித்தனர்... விசாரணையில் அந்த போதை ஆசாமி ராயபுரம் முனியப்பன் செட்டி தெருவைச் சேர்ந்த 44 வயது வெங்கட்ராமன் என்பதும், தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது... குடிபோதையில் பணம் இல்லாததால் அவர் திருட முயன்ற நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்