ஒரு வினாடி கவனம் சிதறிய ஓட்டுநர்... சென்னை ஜிஎஸ்டி சாலையில்...

x

பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில், தடுப்புச் சுவரில் கண்டெய்னர் லாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூர் நோக்கி, கண்டெய்னர் லாரியை மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்பு சுவரில் மோதி எதிரே உள்ள சாலையில் இறங்கியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், லாரி அங்கிருந்து அகற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்