சேலத்தில் துப்பாக்கி தானே வெடித்து முக்கிய இடத்தில் பாய்ந்த குண்டு..

x

சேலம் மாவட்டம் கருமந்துறை மலை பகுதியில் துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்து, ராஜி என்ற விவசாயி காயமடைந்துள்ளார். வேலம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜி, மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென துப்பாக்கி வெடித்த‌தால், தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்த‌தால் காயமடைந்து மயங்கியுள்ளார். பின்னர், மயக்கம் தெளிந்து உறவினருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை, மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிம‌ம் இல்லை என தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்