டூரில் மிஸ்ஸான அப்பா, அம்மா... தவித்த 7 வயது சிறுவன் அடுத்த சிறிது நேரத்தில் நடந்த அதிசயம்

x

டூர் சென்ற இடத்தில் மிஸ்ஸான அப்பா, அம்மா... தன்னந்தனியாக தவித்த 7 வயது சிறுவன்

அடுத்த சிறிது நேரத்தில் நடந்த அதிசயம்

கன்னியாகுமரி அருகே, பேருந்து நிலையத்தில் மாயமான 7 வயது சிறுவனை, போலீசார் மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம் - தீபா தம்பதியினர், தங்களது 3 குழந்தைகள் உட்பட 7 பேருடன் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அப்போது, இந்த தம்பதியின் மூன்றாவது குழந்தையான 7 வயது சிறுவன் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, வடசேரி பேருந்து நிலையத்தில் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த சிறுவனை பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீசார், அதன் பேரில் அவரது பெற்றோரை வரவழைத்து சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்