டெங்குவால் பலியான 5 வயது சிறுமி.. வைரலாகும் கடைசி வீடியோ | Dengue fever

x

திருப்பத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூரை அடுத்த சிவராஜ் பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன்- சுமித்ரா தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். அவர்களில் 7 வயது மகள் யோகலட்சுமி, 5 வயது மகள் அபிநிதி, 8 மாத கைக்குழந்தை புருஷோத்தமன் ஆகிய மூவருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 23ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், அபிநிதியும், புருஷோத்தமனும், மேல்சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், அபிநிதி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், அபிநிதி கடைசியாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்