இமானுவேல் சேகரனின் 66ஆவது நினைவு தினம்களமிறங்கிய 8000 காவலர்கள்-கட்டுப்பாட்டுக்குள் வந்த ராமநாதபுரம்

x

இமானுவேல் சேகரனின் 66ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பரம‌க்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மண்டல காவல்துறை தலைவர் தலைமையில், DIG-க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட, 8 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அங்கு சோதனைச் சாவடிகள் அமைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில் பரம‌க்குடி நகர் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருவோர், 7 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்