வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் கைதிகள் விடுதலை

x

வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் கைதிகள் விடுதலை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, வேலூரில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் மத்திய சிறையில் இருந்து, இதுவரை 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 8 ஆயுள் தண்டனை கைதிகள், வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் முன்விடுதலைக்கான ஆணை மற்றும் சிறையில் செய்த வேலைக்கான 5 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்