"இங்கிலாந்து நாட்டிற்கு 500 செவிலியர்கள்.."- அமைச்சர் செஞ்சி மஸ்தான் சொன்ன முக்கிய தகவல்

x

"இங்கிலாந்து நாட்டிற்கு 500 செவிலியர்கள்.."- அமைச்சர் செஞ்சி மஸ்தான் சொன்ன முக்கிய தகவல்

தமிழக அரசு சார்பில் இங்கிலாந்து நாட்டிற்கு 500 செவிலியர்கள் அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலமாக, சவுதி அரேபியாவிற்கு 6 செவிலியர்கள் நேற்றைய தினம் சென்றனர். அவர்களை அனுப்பி வைப்பதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்