பெண்களின் போட்டோவை வைத்து 50 Fake ID..ஒன்று கூடிய ஊர் மக்கள் - பின்னணியில் வங்கி ஊழியர்

x

நாமக்கல் அருகே தனது பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்களின் பெயரில் போலி இன்ஸ்டா கணக்குகள் தொடங்கிய வங்கி ஊழியர், அதன் மூலம் பலருக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள கிராமத்தில் திருமணமான மற்றும் திருமணமாகாத இளம் பெண்களின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி போலி இன்ஸ்டா கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஆபாச புகைப்படங்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் போலீசில் புகாரளித்தனர். இதில், அதே கிராமத்தை சேர்ந்த வங்கி ஊழியர் முருகேசன் என்பவரை பிடித்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில்,அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, முருகேசனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில், அவரை போக்சோவில் கைது செய்ய கோரி, ஊர் மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்