ஒரே கல்லில் 5 விநாயகர்கள் சிலை - எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும்...

x

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஒரே கல்லில் கலைநயத்துடன் கூடிய ஸ்ரீ பஞ்சவேதப் பிள்ளையார் சிலையை சிற்பக் கலைஞர்கள் செதுக்கியுள்ளனர். திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ திருமகள் சிற்பக்கலையை சேர்ந்த சிற்பிகள், ஒரே கல்லில் 5 விநாயகர்கள் கொண்ட ஸ்ரீ பஞ்ச வேதப் பிள்ளையார் சிலையை உருவாக்கியுள்ளனர். சிறப்பு அம்சமாக 5 விநாயகர் சிலைகளிலும், விநாயகர்கள் கைகள் ஒன்றோடு ஒன்றாக எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அந்த தனியாக தெரியும் அளவிற்கு நூதனமாகவும், 5 விநாயகருக்கு நடுவில் எட்டிப் பார்க்கும் எலி வாகனமும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. பூஜைகள் செய்யப்பட்டு, லாரி மூலம் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்