ஒன்றோடு ஒன்று மோதிய 5 வாகனங்கள்... சென்னை நெடுஞ்சாலையில் பரபரப்பு

x

சென்னை எண்ணூர் நெடுஞ்சாலையில், 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. சென்னை எண்ணூர் நெடுஞ்சாலை திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில், வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, முன்னால் சென்ற கிரேன் மீது மோதியுள்ளது. தொடர்ந்து கிரேனும், 3 வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார். விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், இந்த சம்பவம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்