ஸ்கூல் வேனுக்குள் 5 மாணவர்கள் அலறல்.. ஃபாரீன் புட் என நினைத்ததால் விபரீதம்

x

வெளிநாட்டு உணவுப்பொருள் என நினைத்து சாயபவுடரை சாப்பிட்ட 5 பள்ளி குழந்தைகள், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வேனில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது சிறுவன் ஒருவன், வெளிநாட்டு உணவுப்பொருள் என நினைத்து சாயபவுடரை எடுத்து வந்துள்ளான். அதனை சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு, வாயில் எரிச்சல் ஏற்பட்டு அலறியுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்