அதிகாலையில் 5 கிமீ பயணம்... சாக்கு மூட்டையில் கணவனுக்கு சமாதி - மனைவி கொடுத்த ஷாக்

x
  • அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் வனத்துறைக்கு சொந்தமான கல்லங்காடு முந்திரி காட்டில்,
  • எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலத்தை கடந்த 30ஆம் தேதி போலீசார் கண்டறிந்தனர்.
  • இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், வேல்முருகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
  • அதில், உயிரிழந்த நபர் வடகடல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும், அவரது மனைவி அனுப்பிரியா என்பவருடன் உறவினரான வேல்முருகன் தகாத உறவு இருந்து வந்ததும் தெரியவந்தது.
  • தகாத உறவை அறிந்த சுரேஷ் மனைவியை கண்டிக்கவே, ஆத்திரமடைந்த அனுப்ரியா, கள்ளக்காதலன் வேல்முருகனுடன் சேர்ந்து வீட்டில் சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
  • பின்னர் உடலை சாக்கு பையில் மூட்டை கட்டி, வெண்மான் கொண்டான் முந்திரி காட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது விசாரணையில் அம்பலமானது.
  • அதனைத் தொடர்ந்து, வேல்முருகன் மற்று​ம் அனுப்பிரியாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்