40 ஆண்டுகால நட்பு "நண்பேன்டா" - சர்ப்ரைஸ் கொடுத்த பள்ளி நண்பர் - ஆனந்த கண்ணீர் வடித்த துணை மேயர்

x

சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் வசித்து வருகிறார். அவருடன் 10ம் வகுப்பு படித்த வைத்திய நாதன் என்பவர் படிப்பு முடிந்து வேலை, குடும்பம் என அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செட்டில் ஆன நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தன் பள்ளிக்கால நண்பர் காமராஜை சந்திக்க விரும்பி சென்னை வந்துள்ளார்... பலரிடம் விசாரித்து காமராஜின் வீட்டைக் கண்டுபிடித்து வந்த போது, தனது நண்பர் துணை மேயராக பதவி வகிப்பதைக் கண்டு வைத்திய நாதன் ஆச்சரியம் அடைந்துள்ளார்... வைத்திய நாதனைக் கண்டதும் காமராஜ் நெகிழ்ச்சி அடைந்து ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்... இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்