8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் - ATM கார்டால் சிக்கிய குற்றவாளி

x

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2வது குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

ஜஸ்தீ சிங், ஜல்சீன் கவுர், அவர்களது குழந்தை அரூஹி தேரி, குழந்தையின் மாமா அமந்தீப் சிங் ஆகிய 4 பேரையும் துப்பாக்கி முனையில் கடத்தி கொலை செய்த ஜீசஸ் மானுவேல் சல்கடோ என்ற குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜீசஸ் சல்கடோவின் சகோதரர் அல்ல்பெட்ரோவை போலீசார் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.

மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கைது தகவல் தெரிவித்துள்ளனர்.

முதலில் பிடிபட்ட சல்கடோ, கடத்தி கொலை செய்யப்பட்ட இந்தியர்களின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்திய போது பிடிபட்டார்.

ஆனால் காவல்துறையினர் அவரை நெருங்குவதற்குள் சல்கெடோ தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும் கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்