ஒரு வாரத்திற்கு முன்னதாகவே 4 கோடி `Collection'..பட்டையை கிளப்பும் விற்பனை

x

தீபாவளியை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பாகவே மதுரை திருமங்கலம் ஆட்டுச் சந்தை களை கட்டியது. பொதுவாக 2 ஆயிரத்து 500 ஆடுகள் வரை சந்தையில் விற்பனையாகும் நிலையில், பண்டிகை காலம் என்பதால் 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்படும் என்றும், சுமார் 15 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆடு விலை போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் வர உள்ளதைத் தொடர்ந்து அதற்கு முன்னதாகவே இந்த வாரம் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்