கல்லூரிகளில் சாதிய பாகுபாடு... மூன்று பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

x

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டியதாக வியாசர்பாடி கல்லூரியில் பணியாற்றும் ரவி மயிசின், சிவகங்கையில் பணியாற்றும் கிருஷ்ணன் கும்பகோணத்தில் பணியாற்றும் சரவணபெருமாள் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த 3 பேரையும் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பேராசிரியர்கள் வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்