பிரபல கார் ஷோரூமில் கைவரிசை காட்டிய கும்பல்...தொக்காக தூக்கிய போலீஸ்

x

மாதவரம், பொன்னியம்மன் மேடு சாலையில் பிரபல கார் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி, ஷோரூமின் மின் ஷட்டரை உடைத்து இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மகும்பல் திருடி சென்றதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் உள்ள செல்போன் டவர் சிக்னல் மூலம் கொள்ளையர்களை தேடி வந்தனர். விசாரணையில், கொள்ளையர்களின் செல்போன் சிக்னல் ஆந்திரமாநிலம் கடப்பாவை காட்ட, அங்கு சென்ற போலீசார், மகராஷ்டிராவை மாநிலம் அமராவதியை சேர்ந்த பாவர், பப்புசாவன் மற்றும் சாம்ராவ் ஆகிய மூவரை கைது செய்தனர். விசாரணையில், மூவரும் வடமாநிலங்களில் இருந்து எலக்ட்ரிக் சாதன பொருள்களை வாங்கி வந்து, தமிழகத்தில் குறைந்த விலையில் விற்று வந்தது தெரியவர, மூவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்