கடலூர் சாலை விபத்தில் 3 பேர் பலி... முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

x

கடலூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு வருத்தமடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்