மதுரை ரயில் பெட்டி தீ விபத்து... 2வது நாளாக விசாரிக்கும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

x

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து இரண்டாவது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சவுத்ரி, விசாரணை நடத்தி வருகிறார். இன்றைய தினம், புனலூர் ரயிலை இயக்கியவர்கள், மதுரை ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. பொதுமக்கள் யாரேனும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேறு ஏதேனும் ஆவணங்களோ இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் என மேலும் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் மூலமாக அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்