தாலி கட்டி பரபரப்பை கிளப்பிய 2K கிட்ஸ்..அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த போலீஸ்

x

8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது.

கல்லூரி மாணவர் ஒருவர், பள்ளி சீருடையில் இருந்த மாணவி ஒருவருக்கு, தாலி கட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இவ்வீடியோ குறித்து போலீசாரின் கண்ணில் பட, இருவரையும் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், விசாரணை நடத்தினர்.

8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், மாணவி கடலூரில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் குழந்தைகள் நலக்குழு காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதுபோல் மாணவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் தேவைப்படும்போது விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்