பூண்டியில் 2,500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

x

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டதையடுத்து, கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பூண்டி ஏரியின் நீர்மட்டம் 34.25 அடியை எட்டிய நிலையில், ஏரிக்கு வரும் நீரின் அளவு 3,000 கன அடியாக உள்ளது. பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,000 கன அடியிலிருந்து 2,500 கன அடியாக அதிகரிகப்பட்டது. இதனையடுத்து ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்