இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவருக்கு அரிவாள் வெட்டு - முதியவரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனம் திருட்டு
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே முதியவரை அரிவாளால் தாக்கிவிட்டு மர்ம நபர்கள் அவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே முதியவரை அரிவாளால் தாக்கிவிட்டு மர்ம நபர்கள் அவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். மாவேரிப்பட்டியை சேர்ந்த 65 வயது முதியவரான துரைசாமி அரூர் சென்றுவிட்டு நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி உள்ளார். அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் மர்மகும்பல் அரிவாளால் தாக்கிவிட்டு அவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story