புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக கூறி திமுக சார்பில் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது...
x
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக கூறி திமுக சார்பில் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது...

புதுச்சேரியில் மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள ஜிப்மர் மருத்துமனை மற்றும் மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது.

மருத்துவமனையில் அலுவல் ரிதியான பயன்பாட்டிற்கு ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே அலுவல் ரீதியான பணிகளுக்கு முடிந்த வரை இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு திமுகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் 300 க்கும் மேற்பட்ட திமுகவினர் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்