பட்டாசு ஆலை விபத்து - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

விருதுநகர் மாவட்டம் அச்சன்குளத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாயினர், 26 பேர் காயமடைந்தனர்
x
விருதுநகர் மாவட்டம் அச்சன்குளத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாயினர், 26 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், விபத்தில் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 50 சதவீதத்திற்கு மேல் காயமடைந்தோருக்கு 15 லட்சம் ரூபாயும் 50 சதவீதம் காயமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், 25 சதவீதம் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தோருக்கு 2 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மூலம் ஒரு மாதத்துக்குள் இதனை வழங்க வேண்டும் என்றும், இதனை தமிழக தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்