பைக் ஷோரூமில் ரூ.8 லட்சம் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி

பைக் ஷோரூமில் ரூ.8 லட்சம் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி
x
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே இரு சக்கர வாகன விற்பனை ஷோரூமின் பூட்டை உடைத்து 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒம்பிரகாஷ் சன் மோட்டார்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் அந்த ஷோரூமுக்குள் புகுந்த கொள்ளையர் இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.இந்நிலையில், மறுநாள் ஷோரூம் ஊழியர்கள் வந்து பார்த்த போது ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஷோரூம் ஊழியர்கள் மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்