BREAKING || வி.சி.க.வினர் மீது போலீசார் தடியடி - பரபரப்பு

நெல்லிக்குப்பம் நகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி.
x
நெல்லிக்குப்பம் நகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி. நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தலைவர் மற்றும் துணைத்தலைவர் இரண்டு இடங்களிலும் திமுக போட்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றது. இதனை கண்டித்து நெய்வேலி திமுக சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் கரை நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகை இட்டனர். இதனால் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நெல்லிக்குப்பம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்