சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு முதலுதவி - உதவிய காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்
சென்னை அமைந்தகரை அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த நபருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனிதநேயம் மிக்க காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை அமைந்தகரை அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த நபருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனிதநேயம் மிக்க காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மார்க்கெட் புல்லா அவென்யூ பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் பாபு என்ற நபர் சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் விபத்திற்குள்ளானார். விபத்தை ஏற்படுத்திய நபர்கள் தப்பிச் சென்ற நிலையில், அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை விபத்தில் மயங்கிக் கிடந்த பாபுவுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்து காயம் அடைந்த பாபு நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், காயம் அடைந்தவருக்கு துரிதமாக செயல்பட்டு முதலுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்றிய காவலர்கள் பிரேமா, சரவணன், சிவராமன், கோவிந்தன் ஆகியோரின் செயலை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Next Story