தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 24 ஆயிரத்து 418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 3 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 2 லட்சத்து 8 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து கோவையில் 3 ஆயிரத்து 309 பேருக்கும், திருப்பூரில் ஆயிரத்து 649 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 614 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் ஆயிரத்து 264 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் ஆயிரத்து 198 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
Next Story