நெருங்கிய குடியரசு தின விழா - திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தின விழாவையொட்டி திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
x
குடியரசு தின விழாவையொட்டி திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. நாளைய தினம் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால், நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பயணிகளின் உடைமைகள் மற்றும் பார்சல் அலுவலகத்திற்கு வரும் பொருட்கள் அனைத்தும் ஸ்கேனர் கருவி கொண்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்