தமிழகத்தில் மேலும் 30,744 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 30,744 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு - 33
x
தமிழகத்தில் புதிதாக 30 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 3 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனாவுக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 23 ஆயிரத்து 372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையை அடுத்து கோவையில் 3 ஆயிரத்து 886 பேருக்கும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 377 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 266 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் ஆயிரத்து 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்