ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் 3 மணி நேரம் வாக்குமூலம் !

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர், அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர், அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் போலீசார் விஜயநல்ல தம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த விஜய நல்லதம்பி கடந்த 16 ஆம் தேதி கோவில்பட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனிடையே ஜாமினில் வெளியே வந்த அவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி பரம்வீர் முன்பு பூட்டிய நீதிமன்றத்தில் 3 மணி நேரம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்