செஸ் கிராண்ட் மாஸ்டரான சென்னை சிறுவன் - 14 வயதில் அசத்திய பரத் சுப்ரமணியம்
சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவரான பரத் சுப்ரமணியம், செஸ் (chess) கிராண்ட் மாஸ்டராகி சாதனை படைத்து உள்ளார்.
சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவரான பரத் சுப்ரமணியம், செஸ் (chess) கிராண்ட் மாஸ்டராகி சாதனை படைத்து உள்ளார். இத்தாலியின் கட்டோலிக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச செஸ் தொடரில் பரத் சுப்ரமணியம் பங்கேற்றார். இதில், ஒட்டு மொத்தமாக 6 புள்ளி 5 புள்ளிகள் பெற்ற அவர், 7வது இடம்பிடித்தார். இதன்மூலம் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான தகுதிகளை எட்டிய பரத் சுப்ரமணியம், இந்தியாவின் 73வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி அசத்தி உள்ளார்.
Next Story