திகிலை ஏற்படுத்திய மர்ம பார்சல்... காவல் நிலையத்திற்கு வந்த முந்திரி, சாக்லேட்

திகிலை ஏற்படுத்திய மர்ம பார்சல்... காவல் நிலையத்திற்கு வந்த முந்திரி, சாக்லேட்
x
திகிலை ஏற்படுத்திய மர்ம பார்சல்... காவல் நிலையத்திற்கு வந்த முந்திரி, சாக்லேட் 

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த பார்சல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் உள்ளே முந்திரி பருப்பும் சாக்லேட்டும் இருந்தது தெரியவந்தது. திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு ஆய்வாளர் அறையில் மர்ம பார்சல் ஒன்று இருந்தது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது பார்சலை பிரித்த போது அதன் உள்ளே முந்திரி பருப்பும் சாக்லேட்டும் இருந்ததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்