தாய், தந்தையை இழந்த மாணவி - மழையால் வீட்டையும் இழந்து தவிப்பு

தாய் தந்தையை இழந்து பாட்டி துணையோடு படித்து வரும் மாணவியின் வீடு, கன மழையின் காரணமாக இடிந்ததால் பாதிக்கப்பட்டுள்ளார்.
x
மதுராந்தகம் அருகே உள்ள சின்ன களக்காடி பகுதியை சேர்ந்தவர் மாணவி கஸ்தூரி, தாய் மற்றும் தந்தையை இழந்த கஸ்தூரி ,பாட்டி துணையோடு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் சிறுமிக்கு படிப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு உதவும் படி கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்