கடன் ஒருபக்கம்..!! அவமானம் ஒருபக்கம்..!! வாழ்க்கையை முடித்துக் கொண்ட தம்பதி

வங்கி ஊழியர்களின் தொந்தரவால் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
x
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பூவாணம் கிராமத்தைச் சேர்ந்த அருள்சாமி என்பவர், வீடு கட்டுவதற்கு தனியார் வங்கியில் 8 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.  கடந்த 2 மாதங்களாக கடன் தவணை செலுத்த தவறியதால், வங்கி ஊழியர்கள் தொந்தரவு செய்ததாகவும், மரியாதைக் குறைவாக பேசியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அருள்சாமி மற்றும் அவரது மனைவி சவரியம்மாள் இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்