மாமியாருடன் சண்டை - பைக்கை எரித்த மருமகன்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இருசக்கர வாகனத்தை மருமகன் தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியை சேர்ந்த தீபிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் வரதட்சணையாக கொடுத்த பொருட்களை தந்துவிடுமாறு மாமியார் முனியம்மாள் கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த முருகன், 4 வருடங்களுக்கு முன்பாக மாமியார் வாங்கித் தந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினார். இதில் வாகனம் முற்றிலும் தீயில் கருகியது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Next Story