கேரள ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக மக்கள்

தமிழகத்திற்கு வந்த கேரளா பேருந்துக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
x
தமிழகத்திற்கு வந்த கேரளா பேருந்துக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின், இரு மாநிலங்களுக்கிடையே பேருந்துகள் இயக்க இரு மாநில அரசும் முடிவு செய்தன. அதன்படி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து, கூடலூருக்கு கேரள அரசு பேருந்து வந்தது. அந்த பேருந்துக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து தேங்காய் உடைத்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதேபோல் கூடலூர் மற்றும் உதகையில் இருந்து கேரளாவிற்கும் தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்