முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு வேண்டுகோள்

திமுகவினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களை காப்பாற்ற உழைத்திட வேண்டும் என உரிமையோடு கேட்டு கொள்வதாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
x
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு வேண்டுகோள் 

திமுகவினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களை காப்பாற்ற உழைத்திட வேண்டும் என உரிமையோடு கேட்டு கொள்வதாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.இது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில், "இந்த இடர்மிகு சூழலில், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் கழகத்தினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வரும் செய்திகள் மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், மழை தொடர்ந்து கொண்டிருப்பதால்  முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதில் அனைத்து உதவிகளையும் முன்னணியில் நின்று செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.வரலாறு காணாத பெருமழைக் காலத்தில் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேயக் கடமைக்கான அங்கீகாரம், தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.ஆகவே, கட்சியினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களை இன்னலின்றிக் காப்பாற்றிட உழைத்திடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்