தொடர் மழையால் கடும் பாதிப்பு - படகுகள் மூலம் மக்கள் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர் மழையால் கடும் பாதிப்பு - படகுகள் மூலம் மக்கள் மீட்பு
x
செங்கல்பட்டில் பெய்துவரும் தொடர் கனமழையால், அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோரப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூர், முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட வெள்ள பாதிப்பு சிறப்பு அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ், மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். மீட்புப் பணிகளை அவரே முன்னின்று நடத்திவரும் நிலையில், சமத்துவப் பெரியார் நகரில் பாதிக்கப்பட்ட மக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்